Home » கொறிக்க... » ஆன்மீகம் » புத்த பெருமானின் அனுபவ மொழிகள்…

புத்த பெருமானின் அனுபவ மொழிகள்…

budha2* போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன்.

* வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி.

* அறிஞனோடு வாழ்ந்தாலும், முட்டாளால் அறிவைப் பெற முடியாது. குழம்பின் ருசியை ஒருபோதும் கரண்டியால் அறிய முடிவதில்லை.

* உண்மையைப் பேசுங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். கையில் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

* நரை, திரை தோன்றினால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆக முடியாது. அறிவால் முதிர்ந்திருப்பவரே உண்மையில் பெரியவர்.

* பிரார்த்தனைகளுக்குள் மிகவும் உயர்ந்தது பொறுமையே. அதுவே மேலான தவம்.

* பிறருக்குத் தீங்கு நினைப்பவனைத் துறவி என்று சொல்ல முடியாது.

* மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதி விலக்கு அல்ல.

Leave a Reply