தோகை விரிக்காத மயில் தன் அழகை தானே அறிவதில்லை!
சிறகு விரிக்காத பறவை தன்னால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பதை தானே அறிவதில்லை!
கூவத் தயங்கும் குயில் தன்னால் பாடமுடியும் என்பதை தானே அறிவதில்லை!
முயற்சி செய்யாத மனிதன் தன்னிடம் என்ன இருக்கிறது, தன்னால் எது இயலும் என்பதை தானே அறிவதில்லை!
# உங்கள் திறமைகளை முதலில் நீங்கள் கண்டுகொள்ளுங்கள்.
-ஆதிரா