Home » கொறிக்க... » மூன்று என்ற சொல்லினிலே…

மூன்று என்ற சொல்லினிலே…

finger3மிகக் கடினமானவை மூன்றுண்டு:

1. இரகசியத்தை காப்பது.

2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.

3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:

1. இதயத்தால் உணர்தல்.

2. சொற்களால் தெரிவித்தல்.

3. பதிலுக்கு உதவி செய்தல்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:

1. சென்றதை மறப்பது.

2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.

3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு:

1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.

2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.

3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:

1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.

2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.

3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

Via: Challaram

Leave a Reply