Home » குட்டிக்கதைகள் » அவன் குற்றவாளியல்ல!

அவன் குற்றவாளியல்ல!

மனைவி கள்ளக் காதலனின் அணைப்பில் இருந்தபோது கணவன் வந்துவிட்டான்.
அவ்வளவுதான்!

தன் கையில் இருந்த ரிவால்வரை எடுத்து அவளை அந்தக்கணமே சுட்டுக் கொன்றுவிட்டான்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஐரோப்பாவில் நடைபெற்ற பிரபல வழக்குகளில் இதுவும் ஒன்றாகியது.
இறுதியில்இ ‘இது நியாயமான கொலைதான்! அவன் குற்றவாளியல்ல! அந்த நிலையில் எந்தக்கணவனும் அப்படித்தான் செய்திருப்பான்!’  என்று கோர்ட் தீர்ப்பளித்தது.

விடுதலையான அவன் இறுமாப்புடன் வெளியே சென்றபோது நீதிபதி அவனை அருகில் அழைத்துஇ ரகசியமாகக் கேட்டார் –
‘எனக்கு ஒரு சந்தேகம் அந்தக் கள்ளக் காதலனைச் சுட்டுக்கொல்லாமல் ஏன் உன் மனைவியைச் சுட்டுக்கொன்றாய்?’
 
அவன் மீசையை முறுக்கியவாறே பதில் சொன்னான் – ‘வாராவாரம் ஒருவனைச் சுட்டுக்கொல்வதற்குப் பதில் ஒரேயடியாக ஒருத்தியைக் சுட்டுக்கொல்வது மேல் – என்று நினைத்தேன்!’

Leave a Reply