அல்பேர்டோ மொரெட்டி என்ற இத்தாலியைச் சேர்ந்த நிறுவனமொன்று 24 கரட் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட வெல்வட் காலணி ஒன்றினை உலகளவில் விற்பனைக்காக அறிமுகம் செய்துவைத்துள்ளது.
தனித்துவமான இந்த காலணியை மேற்படி நிறுவனம் ஹொரோ எனும் காலணி உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. உலகில் மனிதர்கள் அணியக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட முதல் 24 கரட் தங்கக் காலணி இதுவெனக் கூறப்படுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் அணியக்கூடியவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தங்கக் காலணியை கடந்த மே மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற மொன்ரி கார்லோ க்ரான் ப்ரிக்ஸ் எப் 1 கார் ரேஸ் போட்டிகளின் போது அறிமுகம் செய்துவைத்துள்ளது.
இலங்கை மதிப்பில் சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த தங்கக் காலணி பானீஸ் நியூயோர்க், ப்ரட் ஸீகல் லொஸ்ஏஞ்சல்ஸ், த ஸ்வாங் ஹொங்கொங், லெவல் சூ டிஸ்ட்ரிக் டுபாய் போன்ற உயர்ரக பல்பொருள் சந்தையில் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது.