இங்கிலாந்தில் 63 உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாடசாலை ஒன்றும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.
ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ேவாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பாடசாலை எதிர் வரும் செப்டெம்பர் முதல் தங்கள் பாடசாலை மாணவிகளுக்கு முழு காற்சட்டை அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
இதுமட்டுமின்றி, வரும் 2014ஆ-ம் ஆண்டு முதல் இருபாலாருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவர வுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாணவிகள் மிகவும் உயரம் குறைவான பாவாடைகளை அணிந்துவருவதால் கீழே அமர நேரிடும்போது மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது என அந்த பாடசாலையின் தலைமை ஆசிரியர் டேவிட் டவுட்பயர் தெரிவித்துள்ளார்.