Home » இது எப்படி இருக்கு? » 24 ஆவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே சிக்கியிருந்த 5 வயது சிறுமி மீட்பு

24 ஆவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே சிக்கியிருந்த 5 வயது சிறுமி மீட்பு

kid-chinaதொடர்­மாடி வீட்டுத் தொகு­தி­யொன்றின் 24 ஆவ­து மாடி­யி­லி­ருந்து விளை­யாட்­டாக ஜன்னல் வழி­யாக ஏறி வெளியில் செல்ல முயற்­சித்த 5 வய­தான சிறு­மியின் தலை ஜன்­னலில் இரும்புக் கம்­பி­க­ளி­டையே சிக்­குண்ட நிலையில் காப்­பாற்­றப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் கடந்த சனிக்­கி­ழமை சீனா­வின் ஹுபேய் மாகா­ணத்தில் டலாய் எனு­மி­டத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த சிறுமி தனது வீட்­டிலின் அறை­யி­லி­ருந்து ஜன்னல் வழி­யாக வெளியே ஏறிச்­செல்ல முயற்­சித்­துள்ளாள். இதன்­போது அச்­சி­று­ மியின் உடல் ஜன்னல் இடை­வெ­ளி­யி­னூ­டாக வெளியே சென்­ற­போ­திலும் தலை ஜன்­னலில் சிக்­கி­யது.

தரை­யி­லிருந்து சுமார் 70 மீற்றர் தூரத்தில் தலை மாட்­டிக்­கொண்டது. சிறு­மியின் அழுகைக் குரல் அயல் வீட்டில் படித்­து­கொண்­டி­ருந்த யுவ­திக்கு கேட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அந்த யுவதி 119 மற்றும் 110 என்ற அவ­சர சேவை தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரி­வித்­துள்ளார்.

தொடர்ந்து அங்கு வந்த மீட்புப் பணி­யா­ளர்கள் ஜன்னல் கம்­பி­க­ளி­டையே சிக்­கி­யி­ருந்த சிறு­மியை 10 நிமி­டங்கள் போராடி மீட்­டுள்­ளனர்.

இதே­வேளை தனது தாய் தன்னை தனியாக வீட்டில் வைத்து அடைத்து விட்டுச் சென்றதாக அந்த 5 வயது சிறுமி கூறியுள்ளாள்.

Leave a Reply