ஒரு கண் தெரியாத மனிதர் கோவிலுக்குள் சென்றார்.
அங்கே ஒருவர்,
“உனக்கு கண் தெரியாது .. அதனால் கடவுளை உன்னால் காண முடியாது … பிறகு ஏன் கோவிலுக்குள் வந்தாய்?” என்றார்.
அதற்கு அந்த கண் தெரியாத மனிதர் சொன்னார்,
“எனக்கு கடவுளைப் பார்க்க கண் இல்லை என்பது உண்மைதான் .. ஆனால் கடவுளுக்கு என்னைப் பார்க்க கண் இருக்கிறதல்லவா!”