Home » குட்டிக்கதைகள் » சில்லறைக் கதை

சில்லறைக் கதை

busபஸ்சில் பயணம் செய்த முதியவர் பஸ் நடத்துனரிடம் தனது மீது சில்லறை காசை கேட்டார்.

நடத்துனரிடம் சில்லறை இல்லாததால், இறங்க முன் கிடைத்தால் தருகிறேன் என்றார் …!

முதியவர் கோபப்பட்டு தனக்கு அருகில் இருந்தவரிடம் சொன்னார் இந்த பாவங்களைஎல்லாம் எப்படி கழிக்கப்போறாங்களோ..? தெரியல்ல என்றார் ..!

அருகில் இருந்தவர் ஒரு முதியோர் இல்லம் நடத்தும் ஒரு இயக்குனர் அவர் இந்த பஸ்சில் தினம் தோறும் பயணம் செய்பவர் ..அவர் சொன்ன பதில் நெஞ்சை தொட்டது …..?

ஐயா பெரியவரே அவருக்கு மோட்சம் தான் கிடைக்கும் காரணம் மாதம் தோறும் இப்படி கொடுக்க முடியாத சில்லறை காசுகளை சேர்த்து எமது அநாதை இல்லத்துக்கு கொண்டு வந்து தருவார் -என்றார்

முதியவர் பஸ்சைவிட்டு இறங்கும் போது நடத்துனரின் கையை முத்தமிட்டு சென்றார் .

Leave a Reply