சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நேரடியாக இணையம் மூலம் பார்க்கும் மேலை நாட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிறார் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இணையத்தில் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த வறிய குடும்பங்களுக்கோ அல்லது அவற்றை ஏற்பாடு செய்யும் குற்றக் கும்பல்களுக்கோ பணத்தை கொடுத்து, அந்த சிறார்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்யப்பட்டு, அதனை மேற்கத்தைய நாட்டவர் நேரடியாக ஸ்கைப் மற்றும் இணையம் மூலம் பார்த்து மகிந்து வருவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சிறார் துஷ்பிரயோகம் மற்றும் இணைய பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது.