Home » இது எப்படி இருக்கு? » ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை ரசிக்க கண்ணாடி பொருத்திய 19 சாரதிகள் கைது!

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை ரசிக்க கண்ணாடி பொருத்திய 19 சாரதிகள் கைது!

arrest3ஆட்­டோவில் ஏறும் பெண்­களின் அழகை ரசிக்கும் வகையில் தமது ஆட்­டோக்­களில் கண்­ணா­டி­களை பொருத்­தி­யி­ருந்த 19 ஆட்டோ சார­தி­களை மத்­து­கம பொலிஸார் கடந்த 27 ஆம் திகதி கைது செய்­துள்­ளனர்.

கட்டை கவுண் அணிந்து கொண்டு ஆட்­டோவில் ஏறும் யுவ­தி­களின் அந்­த­ரங்­கத்தை அவர்­க­ளுக்கு தெரி­யா­ம­லேயே கண்­ணாடி மூலம் கண்டு ரசித்த ஆட்டோ சார­திகள் சிலர் ஆட்டோ தரிப்­பி­டத்தில் தமது அனு­ப­வங்­களை பகிர்ந்து கொண்­ட­தாக மத்­து­கம பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றை அடுத்து இச்­சா­ர­திகள் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்ட ஐந்து ஆட்டோ சார­தி­க­ளிடம் ஆட்­டோ­வுக்கு உள்ளே கண்­ணாடி பொருத்­தி­யது ஏன் என பொலிஸார் கேட்­ட­போது அவர்கள் மெளனம் காத்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தேக நபர்­க­ளான ஆட்டோ சார­தி­களை பிணையில் விடு­வித்­த­தா­கவும் எதிர்­வரும் 8 ஆம் திகதி சந்­தேக நபர்­களை ஆட்­டோவில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­ணா­டி­க­ளுடன் மத்­து­கம மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply