நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது, நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப்படுகிறது.
இதன் உண்மைப் பொருள்.
பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி… சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி இறைவனின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் “என் சிற்பம் எப்படி? என்று.
அதற்குச் சுவைஞன் சொன்ன பதில்
நாயகனை(இறைவனை) கண்டால் கல்லைக் காணோம்
கல்லைக் கண்டால் நாயகனை(இறைவனை) காணோம்.
என்பதாக இருந்தது.
அதாவது அதில் நாயகனை(இறைவனை ) பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாயகனை தெரியவில்லை. அதாவது ஆஸ்திகர்களுக்கு அந்த சிற்பம் நாயகனாகவும் நாஸ்திகர்களுக்கு அது கல்லாகவும் தெரியும் என்பது தான் அதன் உண்மை அர்த்தம்.