Home » இது எப்படி இருக்கு? » கடிக்க வந்த நாயைக் கடித்துக் குதறிய நபர்: நாய்க்கு முகத்திலும் நபருக்கு உடம்பிலும் காயங்கள்

கடிக்க வந்த நாயைக் கடித்துக் குதறிய நபர்: நாய்க்கு முகத்திலும் நபருக்கு உடம்பிலும் காயங்கள்

dogயாழ்ப்­பாணம் திரு­நகர் பகு­தியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மது­போ­தை யில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குத­றி­யதால் மயக்­க­ம­டைந்த நிலையில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்று புதன்­கி­ழமை காலை மது­போ­தையில் துவிச்­சக்­கர வண்­டியில் யாழ். சென்­பற்றிக்ஸ் கல்­லூரி வீதி­யூ­டாக சென்று கொண்­டி­ருந்து போது அவரைத் துரத்­திய நாய் தனது துவிச்­சக்­கர வண்­டியை விட்டு இறங்கி நாளைக் கடித்துக் குத­றி­யுள்ளார்.

இதனால் நாய்க்கு முகத்தில் காய­மேற்­பட்­டது அத்­தோடு குறித்த இளை­ஞ­ருக்கும் காயங்கள் ஏற்­பட்­டுள்­ளது. இரத்தப் போக்கு கர­ண­மாக நாயைக் கடித்த இளைஞன் மயக்­க­ம­டைந்­துள்ளார் அரு­கி­லுள்ள வீட்­டுக்­கா­ரரின் உத­வி­யுடன் ஆட்டே ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

Leave a Reply