டெங்கு நோயைக் குணப்படுத்த கரும்பு கருப்பட்டியும் சின்னவெங்காயமும் சிறந்த மருந்தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிலையம் இந்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பாக கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும் இராசாயன விஞ்ஞானம் தொடர்பான விரிவுரையாளருமான சிரில் சுதுவெல்ல கருத்து தெரிவித்த போது கரும்பு கருப்பட்டி சர்க்கரை என்றும் அழைக்கப்படுவதாகவும் தேநீருடன் கரும்பு கருப்பட்டியை அருந்துவதன் மூலம் உடம்பின் சீனியை குறைத்துக் கொள்ள முடியும். அத்துடன் டெங்கு நோயாளர் கரும்பு கருப்பட்டியையும் சின்ன வெங்காயத்தையும் உட்கொள்வதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்தலாமென தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலதிக ஆய்வுகளை ஆயுர்வேத வைத்திய கல்லூரியிடம் ஒப்படைக்க கரும்பு ஆய்வு நிலையம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.