Home » கொறிக்க... » பெண்ணுலகம் » மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்!

மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்!

அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை
பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது.

இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும் பெண்களே அதிகம் ஆளாகின்றனர்.

நுரையீரலில் மது ஏற்படுத்தும் பாதிப்பு இரு பாலாருக்கும் ஒரே விதத்திலேயே அமைந்துள்ளது. பெண்கள் மதுவுக்கு விரைவில் அடிமையாக முக்கிய காரணம் அவர்களது உடம்பில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதாகும்.

ஆண்களது உடம்பில் 65 வீதம் நீர்த்தன்மை காணப்படுகின்றது. பெண்களுக்கு இது 55 வீதமாகவே உள்ளது. லண்டன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் டொக்டர்.மார்ஷா மோர்கன் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்